Header Ads



ரணில் - மைத்திரி ஜோடிக்கு, ராஜபக்ஷ என்றாலே பீதி

ராஜபக்ஷ குடும்பத்தில் யாராவது ஒருவர் சிறையில் இருக்க வேண்டும். அப்போது தான் மைத்திரி ரணில் ஜோடிகளுக்கு நித்திரை போகும். ராஜபக்ஷ குடும்பத்தில் ஒருவராவது வெளியில் இருந்தால் இவர்களுக்கு தூக்கம் வராது. எனவே ராஜபக்ஷ என்ற பெயரைக் கொண்ட விஜயதாஸ ராஜபக்ஷவும் வெகு சீக்கிரத்தில் கைதாகலாம் என  பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 

ராஜகிரியிவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைப்பெற்ற ஊடக சந்திப்பிலேயே  பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார். 

ரணில் மைத்திரி ஜோடிக்கு ராஜபக்ஷ என்ற பெயருக்கு சரியான பயம்.  எனவே தான் ராஜபக்ஷ என யார் பெயர் வைத்திருந்தாலும் கைது செய்து சிறையில் அடைக்கின்றார்கள். தற்போது நாமல் விடுதலையான  போதும் பஸில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். எனவே ஒருவராவது சிறையில் இருக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.