தனிப்பட்ட ஒரு குடும்பத்திற்காக, ஒழுங்கு செய்யப்பட்டதே பாத யாத்திரை - ரஞ்சன்
கூட்டு எதிர்க்கட்சிக்கு போராடுவதற்கு காரணங்கள் இல்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -29- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
கூட்டு எதிர்க்கட்சிக்கு போராட்டம் நடாத்த வலுவான காரணங்கள் எதுவுமில்லை.
இதனால் வரைவு திட்ட நிலையில் காணப்படும் அரசியல் அமைப்புக்கு எதிராக கோசம் எழுப்பி பாத யாத்திரை நடத்துகின்றனர்.
முழுமைப் பெறாத ஓர் அரசியல் அமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த கூட்டு எதிர்க்கட்சி முயற்சிக்கின்றது.
இந்த பாத யாத்திரையானது மக்களுக்கான போராட்டமல்ல.
ஒரு தனிப்பட்ட குடும்பத்திற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment