Header Ads



புதிய அரசியலமைப்பில், தேசியப்பட்டியல் இல்லை - கலாநிதி ஜயம்பதி


நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு பதிலான மாற்றுக்கருத்துக்கள் தொடர்பில் அரசியலமைப்புதொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படல் வேண்டும் என்ற கொள்கையை ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதால், அது தொடர்பில் முடிவெடுக்கநாடாளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது என்று குழுவின் உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.

முன்னர் இந்த விடயத்தில் முரண்பாடுகள் இருந்தபோதும் தற்போது இரண்டு கட்சிகளும் இதில்ஒருமைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அரசியலமைப்பு யோசனையில் மேற்கத்தைய நாடுகளின் பங்களிப்பும் இருப்பதாகவெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

இந்தநிலையில், தேர்தல் சீர்திருத்தம், அதிகாரப்பரவலாக்கம் போன்ற விடயங்களில்பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்கு மத்தியில் ஒருமித்த கருத்துஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அடுத்த தேர்தல் முறையின்கீழ் தேசியப்பட்டியல் முறை இருக்காது என்று அவர்தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. No National list. No vehicle permit. No jumbo cabinet. No siblings wives and son secretaries. No advisors.

    ReplyDelete

Powered by Blogger.