Header Ads



நான் களவு எடுத்தது கிடையாது, நிரூபிக்க சாட்சியங்களும் கிடையாது - கோத்தபாய

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் களவு எடுத்தது கிடையாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பெற்றோரது சமாதிகள் அமைக்கும் பணிகளுக்கு அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகின்றது.

வீரகெட்டிய டி.ஏ.ராஜபக்ச திட்டம் என்ற பெயரில் இந்த மோசடி இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளுக்காக நேற்றைய தினம் ஜனாதிபதி விசாரணைக் குழுவின் எதிரில் முன்னிலையாகி திரும்பிய போது ஊடகவியலாளர்களிடம் கோத்தபாய இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நான் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களினால் பிரச்சினைகள் உருவாகியுள்ளது என்ற போதிலும் நான் களவாடியது கிடையாது.

இது வரையில் சுமத்தப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் நான் குற்றவாளி கிடையாது.

நான் எந்தவொரு பணத்தையும் களவாடவில்லை, அவ்வாறு களவாடினேன் என நிரூபிக்க சாட்சியங்களும் கிடையாது.

எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவும் முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. Your group very good plan THEFT GROUP.ALIBABA 400THEFT

    ReplyDelete
  2. சாட்சிகள் உயிரோடுஇருந்தால் தானே சாட்சியமளிக்க அவர்கள் இருந்தால் சொல்வார்கள்

    ReplyDelete
  3. Every thief says like these........ can we trust them???

    ReplyDelete
  4. PATHIYA ENNRU KEATAAL NAAN KALAVEDUKALA ENRU OLAMBORARU

    ReplyDelete

Powered by Blogger.