Header Ads



எர்துகான் இன்று அல்-ஜஸீராவுக்கு அளித்த, விறுவிறுப்பான நேர்காணல்


-Mohamed Basir-

துருக்கிய ஜனாதிபதி ரஜப் தைய்யிப் அர்துகான் இன்று 21-07-2016 அல்-ஜஸீராவுக்கு அளித்த விறுவிறுப்பான நேர்காணலின் சுருக்கம் இது.

• கடந்த வெள்ளி 15 ஆம் திகதி மர்மரைஸ் ஹொட்டலில் நான் இருந்தேன். அப்போதுதான் புரட்சிக்கான சதிமுயற்சி குறித்து எனக்கு தெரியவந்தது.
• புரட்சி இரவன்று துருக்கி மக்களை ஆறுதல்படுத்த வேண்டும் என்ற பிடிவாதம் என்னுள் இருந்தது.
• ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக வீதிகளுக்கு இறங்குமாறு மக்களுக்கு நான் விடுத்த அழைப்புக்கு மக்கள் உடனடியாக பதிலளித்தனர்.
• புரட்சி குறித்த முதலாவது செய்தியை எனது மருமகனிடமிருந்து நான் பெற்றேன்.
• புரட்சிக்கான முயற்சியை அறிந்த போது மர்மரைஸிலிருந்து தாலான் போய் அங்கிருந்து இஸ்தான்பூல் போனேன்.
• புரட்சி சதிமுயற்சியின் 12 மணித்தியாலங்களுக்கு பின்னர் அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
• புரட்சிக்கு சவால்விடுவதில் முன்னைய அனுபவங்களிலிருந்து பயனடைந்தோம்.
• புரட்சியில் இறங்கியவர்களின் எண்ணிக்கை பற்றி அறியமுடியவில்லை. எனினும் அவர்களில் சிறுதொகையினர் கோலன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
• புரட்சியை எதிர்கொள்வதற்கான வழிவகைகளை ஆராயுமாறு தேசிய புலனாய்வுத்துறை ஆலோசகருடன் நான் பேசினேன்.
• மக்கள் நாட்டை பாதுகாத்துள்ளனர். அவர்கள் வீதிகளில் யுத்த டாங்கிகளுக்கு சவால் விடுவதில் வென்றனர்.
• கோலனின் இயக்கம் ஊடுருவல் செய்யும் அளவுக்கு புலனாய்வுத் துறையில் ஓட்டைகள் இருக்கலாம்.
• கோலன் பயங்கரவாத இயக்கமே இப்புரட்சியை மேற்கொண்டிருக்கிறது.
• புரட்சியை அழிப்பது இறுதியானதாக இருக்காது. வேறு சதித்திட்டங்கள் அங்கு இருக்கலாம்.
• புலனாய்வுப் பிரிவும் நீதித்துறையும் கோலன் பயங்கரவாத இயக்கத்தின் இயல்பு குறித்த ஆதாரங்களை முன்வைத்திருக்கின்றன.
• இதுவரை மொத்தமாக 9004 பேர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
• புரட்சியை மேற்கொண்டவர்களுக்கு கோலனுடன் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
• புரட்சி முயற்சி ஒரு தேசத்துரோகம் என்று பார்ப்பது அவசியம். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
• பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் இராணுவப் புரட்சியின் பின்னணியிலான கைதுகளை விமர்சிப்பதில் தவறிழைத்துள்ளார்.
• புரட்சிக்கு சவால்விடுவது என்பதன் கருத்து கோலனின் இயக்கத்தை அழிப்பது என்பதல்ல.
• சட்டத்தினடிப்படையில் எம்முடைய அனைத்து பணிகளையும் நாம் முன்னெடுப்போம்.
• 200 இற்கு அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதில் சிலர் யுத்த டாங்கிகளால் நசுக்கிக் கொல்லப்பட்டுள்ளனர்.
• உலகத்தின் மிகச் சிறந்த உளவுப்பிரிவுகளில் கூட பலவீனம் இருப்பதை காண்கிறோம். அமெரிக்கா, பெல்ஜியம்.. போன்ற நாடுகளில் இதனை அவதானித்திருக்கிறோம்.
• எமது நாட்டின் பிரச்சினையை ஆராய்வதற்காக அனைத்து தரப்பினருடனும் ஒன்று சேர்வதையிட்டு நான் பெருமையடைகிறேன்.
• ரஷ்ய விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவிமானிகளுக்கு எதிரான ஆதாரங்களை நீதித்துறை கண்டுபிடிக்கலாம்.
• புரட்சியில் கோலனின் பங்கு குறித்த எமது ஆதாரங்களை அமெரிக்காவுக்கு நாம் வழங்கியுள்ளோம்.
• ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமையுடன் புரட்சியாளர்களுக்கு தொடர்பிருக்கிறதா என்பது குறித்து இதுவரை எம்மிடம் தகவல்கள் இல்லை.
• புரட்சியாளர்கள் பத்ஹூல்லாஹ் கோலனை கடவுள் அந்தஸ்த்தில் வைத்து நோக்குகின்றனர்.
• புரட்சிக்கான சதிமுயற்சியை எதிர்கொள்வதில் எமக்கு ஆதரவளிப்பதாக நேட்டோ தெரிவித்திருக்கிறது.
• தூக்குத் தண்டனையை மீளக் கொண்டுவருவதற்கு மக்கள் விரும்புகின்றனர். பாராளுமன்றத்தின் தீர்மானத்திற்காக காத்திருக்கிறோம்.
• துாக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு பாராளுமன்றம் தீர்மானம் எடுத்தால் அதனை உடடினடியாக நான் நடைமுறைப்படுத்துவேன்.
• ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட தலைவரை சதிப்புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றிய ஸீஸிக்கும் ஜனநாயகத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பகளும் கிடையாது.
• சிரியாவும் எகிப்தும் ஜனநாயகத்திற்காய் ஏங்கித் தவிக்கின்றன.
• புரட்சிக்குழு புரட்சியின் சூத்திரதாரியின் திட்டத்திற்கு ஏற்பவே நடந்து கொண்டுள்ளது.
• துருக்கியில் எந்தவொரு ஊடகத்திற்கும் நான் சவால் விட்டதில்லை.
• என்னையும் எனது குடும்பத்தைப் பற்றியும் விமர்சிக்கும் சென்னல்கள் கூட புரட்சிக்கு எதிராகவே நின்றன.
• சில ஊடகங்கள் சொல்வது போன்று புரட்சி நாளன்று நான் நாட்டை விட்டு செல்லவில்லை.
• துருக்கியின் ஆயுதப்படையைச் சேர்ந்த மோசடிக்கார குழுவொன்று நாட்டின் ஆயுதங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு குண்டுவீசியிருக்கிறது. பல நிரபராதிகளை கொன்றிருக்கிறது.
• பயங்கரவாத அமைப்பு என்பதற்கு மேலால் இப்புரட்சிக்கு ஒரு சூத்திரதாரி இருக்கலாம்.
• 3 மாதங்களுக்கான அவசர கால நிலைமையை நான் பிரகடனம் செய்கிறேன்.
• அவசரகால நிலைப் பிரகடனம் என்ற எமது தீர்மானத்தை விமர்சிக்க ஐரோப்பாவுக்கு எத்தகுதியும் கிடையாது.
• துருக்கியின் தலைவர் என்றவகையிலும் இராணுவத்தின் பொதுத்தளபதி என்ற வகையிலும் புரட்சியாளர்கள் எனும் கிருமிகளிலிருந்து ஆயுதப்படையை சுத்தப்படுத்துவோம்.
• அவசரகால நிலைப் பிரகடனத்தின் நோக்கம் ஜனநாயகத்திற்கு எதிரான அபாயங்களை எதிர்கொள்வதற்குத் தேவையான எட்டுக்களை எடுத்து வைப்பதாகும்.
• ஸீஸி ஒரு சதிப்புரட்சியாளன். தனது ஆயிரக்கணக்கான மக்களை கொலைசெய்த கொலைகாரன். அஸத் 6 இலட்சம் சிரியர்களை கொன்ற கொலைகாரன்.
• அவசரகால நிலைமைப் பிரகடனும் சட்டத்தின், சுதந்திரத்தின் ஆட்சியுடன் முரண்படாது.

3 comments:

  1. மாஷா அல்லாஹ் இவர்தான் உண்மையான மக்கள் தலைவன்

    ReplyDelete
  2. இஸ்லாத்தையும் முஸ்லிம்களாயும் அழிக்க உலகத்தின் அராஜக அரசுகள் துடிக்கின்றன.இருப்பினும் இதன் கிளைகள் வானலாவ உயர்ந்து செல்வதைப்பாரக்கும் போது.அனைத்தையும் மிகைத்த ஒரு ஆட்சியாளன் இருப்பதை கட்டாயம் ஏற்றாக வேண்டியுள்ளது.எப்போதும் பெறுமதிமிக்க ஒன்றுக்கான எதிரிகள் அதிகம் இவ்வாறு எதிரிகளின் தொகை அதிகரிப்பும் இதன் பெறுமதியை கூட்டிவிடுகின்றன.

    ReplyDelete
  3. May Allah Bless all the Muslims Lands and their leaders.

    No question.. OUR brother Edorgan is Good Muslim Leader and worked hard for the sake of Turkey and Other Muslims around the world.

    He has a vision to bring back Trukey in to Islamic enviroment.

    May Allah Bless him and Protect him.

    BUT I have one question ?

    IS DEMOCRASY an accepted methodology in ISLAMIC view ?

    As for my understanding in the history of Islam at time of Prophet Muhammed or rightly guided Kulafa ... They did not follow this method of selecting leaders by the votes of publics, rather they assigned SOORA council which inluded qualified people to select the Leadrship.

    Democrasy counts the Number of Heads BUT
    Islam counts what is inside the heads

    This makes big difference.

    Democrasy is a western method that we Mulsim are trying to replace it with Our Own System of SOOR councils.

    May Allah Guide us in the path of SALAF us saliheens.

    ReplyDelete

Powered by Blogger.