Header Ads



ஐக்கிய தேசியக் கட்சி + ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தலைவர்களை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு


ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாளை பாத யாத்திரை மேற்கொள்ளவிருந்த நிலையில், இதற்கு இடைக்காலத் தடை விதித்து கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மஹிந்தானந்த அளுத்கமகே, திலும் அமுணுகம, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் லோஹான் ரத்வத்த உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், நாளை காலை கண்டியில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு வேலைத் திட்டத்தையும் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் வைத்துக் கொள்ளுமாறு, லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் கபீர் கசீம் ஆகியோருக்கு நீதிமன்றம் தெரியப்படுத்தியுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு வேலைத் திட்டம் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் பாத யாத்திரையையும் ஒழுங்கு செய்த தலைவர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மாவனெல்ல நீதவான் என்.கே.மஹிந்த இன்று உத்தரவிட்டுள்ளார்.

மாவனெல்ல பொலிஸார் முன்வைத்த மனுவொன்றை ஆராய்ந்த நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.