Header Ads



முஸ்லிம்கள் பிச்சைப் பாத்திரம் ஏந்தவேண்டிய, துர்ப்பாக்கியம் ஏற்படுமென எச்சரிக்கிறேன் - சேகு இஸ்ஸதீன்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

வடக்கு- கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழருக்கு சமஷ்டித் தீர்வு வழங்கப்படுமானால் அப்பகுதி முஸ்லிம்கள் தமது சொந்த வீட்டில் அகதிகளாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் முன்னாள் ஸ்தாபகத் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.

வடக்கு- கிழக்கு தமிழர்கள் போன்று முஸ்லிம்களும் தம்மை ஒரு தேசியமாக பிரகடனம் செய்யாதவரை தமிழ் சமூகத்திற்கு சமாந்தரமான தீர்வை அடைந்து கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

அறிஞர் சித்திலெப்பை ஆய்வமயத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் நடைபெற்ற அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே அவர் இவற்றைக் குறிப்பிட்டார்.

ஆய்வமையத்தின் தலைவர் சட்டத்தரணி மர்ஸூம் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முஸ்லீம் தேசியம், சுய நிர்ணயம், வடக்கு- கிழக்கு இணைப்பு, தென்கிழக்கு அலகு, இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களின் பகிபாகம் போன்ற அம்சங்களை விளக்கி சேகு இஸ்ஸதீன் ஆற்றிய நீண்ட உரையில் மேலும் கூறியதாவது; 

"அரசியல் யாப்பு மாற்றம் என்பது தமிழருக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாகவே மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் முஸ்லீம் சமூகத்தின் பகிபாகம் கேள்விக்குறியாகவே உள்ளது.

வடக்கு மாகாண சபை, தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன தமிழருக்கு எவ்வாறான தீர்வு தரப்பட வேண்டும் என தெட்டத்தெளிவாக சொல்லி விட்டன. முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்மொழிந்துள்ள தீர்வுத் திட்ட வரைவு தமிழருக்கான தீர்வுகளை உறுதியாக பறைசாற்றியுள்ளது. அவர்கள் எல்லோரும் ஒருமித்த கருத்துடன் செயற்படுகின்றனர். வடக்கு- கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதில் தமிழ் பேசும் இனக்குழுமம் என்று முஸ்லிம்கள் கணிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் எந்தவொரு முஸ்லீம் கட்சியும் இதுவரை முஸ்லிம்களுக்கான தீர்வு இவ்வாறுதான் அமைய வேண்டும் என்று கோரி ஒரு காகிதத் துண்டையேனும் எங்கும் சமர்ப்பிக்கவில்லை. தமிழ் சமூகத்தின் சுய நிர்ணயத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அதன் தலைமைகள் மிகவும் விடாப்பிடியுடன் நின்று உத்வேகத்துடன் காய்களை நகர்த்தி வருகின்றன. ஆனால் முஸ்லீம் தலைமைகள் என்று சொல்வோர் இன்னும் ஒரு துரும்பைக் கூட நகர்த்தவில்லை.

தமது சுயநிர்ணயத்திற்காக தமிழர்கள் முழுமூச்சாக நிற்கிறார்கள். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழசுக் கட்சி மாநாட்டிலேயே அவர்கள் தமது தேசியத்தை பிரகடனம் செய்து விட்டார்கள். தேசியம் என்பதற்குப் பின்னால் தேசம் இருக்கிறது. சர்வதேச சட்டங்கள் கூட அதனை அங்கீகரித்துள்ளது. கட்சியின் பெயரிலேயே தமிழ் அரசு என்று பறைசாற்றி விட்டார்கள். அனைத்து தமிழ் கட்சிகளும் தமது கட்சியின் பெயரில் தமிழீழம் என்று சூடிக் கொண்டிருக்கின்றன.

நமது சகோதர சமூகம் ஒன்று இவ்வளவு செய்தும் கூட முஸ்லிம்கள் இன்னும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கின்றோம். நாம் பேசுவதற்க்கே தயார் இல்லை என்கின்றபோது எவ்வாறு போராட்டத்தில் குதிக்கப் போகின்றோம். முஸ்லிம்கள் முதலில் தாமும் ஒரு தேசிய இனம் என்ற ரீதியில் தேசியத்தையும் சுய நிர்ணயத்தையும் வலியுறுத்த வேண்டும். விக்கினேஸ்வரன் சொல்வது போன்று நாம் ஒரு இனக்குழுமம் இல்லை. நாம் தமிழருக்கு நிகரான ஒரு தேசிய இனம். எமக்கும் சமத்துவமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் நாம் உரத்துச் சொல்ல வேண்டும்.

வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு உடுத்த உடையுடன் புலிகளினால் துரத்தியடிக்கப்பட்ட 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி அன்றே முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை நிரூபித்து விட்டார்கள். கிழக்கில் முஸ்லிம்களை கடத்திக் கொலை செய்தார்கள். பள்ளிவாசல்களுக்குள் புகுந்து சுட்டுக் கொன்று குவித்தார்கள். கிழக்கில் சுமார் 1500 முஸ்லிம்கள் தமிழ் ஆயுதக் குழுக்களினால் கொலை செய்யப்பட்டுள்ளனர். சுமார் 60 ஆயிரம் முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

அன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஆயுத குழுவினரால் முஸ்லிம்கள் நசுக்கி அடிமைப்படுத்தப்பட்டிருந்தனர். வடக்கு- கிழக்கு மீண்டும் இணைக்கப்பட்டு அவர்களுக்கு சமஷ்டி கொடுக்கப்பட்டால் முஸ்லிம்கள் தமது சொந்த வீடுகளில் அகதிகளாக்கப்பட்டு, அவர்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படும் என எச்சரிக்கின்றேன்.         

ஜே.ஆர்.ஜெயவர்த்தன்வின் ஆட்சிக்கு காலத்தில் தமிழருக்கு தீர்வு வழங்கும் பொருட்டு மாகாண மட்டத்தில் அதிகார பகிர்வை வழங்குவதற்காக வடக்கு- கிழக்கு இணைக்கப்படுகின்ற சூழல் ஏற்பட்டபோது கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லீம் பெரும்பான்மை பிரதேசங்களையும் வடக்கிலுள்ள முஸ்லீம் பெரும்பான்மை பிரதேசங்களையும் ஒன்றிணைத்து நிலத்தொடர்பற்ற ஆட்சி அதிகாரம் கொண்ட தென்கிழக்கு அலகுக் கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஊடாக முன்வைத்திருந்தோம்.

அன்று வடக்கு- கிழக்கு இணைந்த மாகாண சபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் போட்டியிட்டது. நீங்கள் அத்தேர்தலில் போட்டியிட்டிருக்கா விட்டால் தாற்காலிகமாகக் கூட வடக்கு- கிழக்கு இணைக்கப்பட்டிருக்க மாட்டாது என அண்மையில் என்னை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் சொன்னார். முஸ்லிம்கள் தமிழரின் அபிலாஷைகளுக்கு குறுக்கே ஒருபோதும் நின்றதில்லை. ஆனால் முஸ்லிம்களை ஒரு தனித்துவமான இனமாக அங்கீகரித்து தமக்கு கிடைக்கின்ற சமத்துவமான தீர்வை முஸ்லிம்களும் பெறுவதற்கு தமிழர் தரப்பு இன்னும் இணங்கி வருவதாக தெரியவில்லை. ஆகையினால் முதலில் நாம் முஸ்லீம் தேசியத்தை முன்னிறுத்த புறப்பட வேண்டும். முஸ்லீம் சுயநிர்ணயத்திற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு தயாராக வேண்டும்" என்றார்.

அவுஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் காத்தான்குடியை சேர்ந்த டொக்டர்  அமீர் அலியும் இந்நிகழ்வில் உரையாற்றியதுடன் கேள்வி பதில்களும் இடம்பெற்றன.

4 comments:

  1. Muslims should never go in for an amalgamation of the North and East as one district/Province. The Muslims in the North-East have suffered very much and lost a lot under the administrative power of Tamil Government Servants/government officials and the dominating Tamil political parties since independence. The Muslims in the North and East were treated as second class citizens. With the advent of the LTTE, it became much worst, till May 2009. The Colombo Muslims or Muslims who live outside the North and East did not feel the oppressions, because they were administered by the Sinhalese administrators/government officials who were communal too, but considerate.
    The Eastern Province was formally born on 1 January 2007. On 14 July 2006, the JVP filed three separate petitions with the Supreme Court of Sri Lanka requesting a separate Provincial Council for the East. On 16 October 2006 the Supreme Court ruled that the proclamations issued by President Jayewardene on 2nd., and 8th., September 1988 were null and void and had no legal effect. SINCE THEN, the Muslims in the Eastern Province have some form of FREEDOM and enjoy FUNDAMENTAL and POLITICAL RIGHTS. Muslims of the Eastern Province should OPPOSE a demerger of the North and Eastern Provinces at any cost, Insha Allah. The political campaign spearheaded by former Minister and Secretary General Hassanali for a separate Muslim Provincial Council or Administrative Unit is reasonable in the present context of the detrimental politics/policies of the Yahapalana government with regards the “MUSLIM FACTOR” issues. This separate Muslim administrative unitis is in line with the policies of the late M. H. M. Ashraff, the founder of the SLMC. Hassanali is quoted in the media as to have said that “The late Mr. Ashraff had proposed that the Muslim community must be considered as an equal stakeholder in Sri Lanka, be recognized as a separate ethnic community and be given a separate provincial council”. The Muslim community in the East should fully support this thinking irrespective of party politics, be it SLMC, ACMC, National Congress, UNP, SLFP, Ekkabadde Vipaksaya or NMGG (National Movement for Good Governanace). The proposed Muslim administered provincial council should will be carved out from the Muslim majority local authorities in the Trincomalee, Batticaloa and Manner districts. The three districts must be merged with three coastal districts comprising of three electorates, namely Pottuvil, Samanthurai and Kalmunai, it has been proposed, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and former SLFP District Organizer – Trincomalee District and Convener – The Muslim Voice.

    ReplyDelete
  2. மதிப்புக்குரிய சேய்க் இஸ்ஸதீன் அவர்களின் இந்த ஆழமான பேச்சை முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக் கொண்டிருக்கும் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்று சேர்ந்து முஸ்லிம்கள் ஒரு தனித்துவமாக தேசிய இனம் என்பதையும் அந்த முஸ்லிம் தேசியத்துக்குரிய நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொள்ள இணைந்து செயல்பட வேண்டும் என்பது எனது பணிவான உருக்கமான வேண்டுகோள்.

    ReplyDelete
  3. Allah will never allow we muslim to carry begging bowl. Dirty politicians like you may carry soon. Muslims are degraded because of politicians like you. Withn a short period of time how many political parties you were being patronized. Make dua Allah save you from carrying begging bowl

    ReplyDelete
  4. உங்கள் உரிமைகளுக்காக முயற்சி/போராட்டம் ஒன்றும் செய்யாமாட்டீர்கள். சுயபுராணம் பாடிக்கொண்டிருப்பீர்கள். பின்னர் தமிழர்களின் முயற்சியால் அவர்களுக்கு ஏதாவது கிடைத்தால் பொறாண்மை கொண்டு அதை குழப்புவதற்கு மட்டும் வீர்கொண்டு போராடுவீர்கள். இது தான் உங்கள் கொள்கை.

    அதணால் தான் நீங்கள் ஜெனீவாவில் தீர்மானங்கள் வரும்போது ராஜபக்‌ஷக்கு முழு ஆதரவு செய்தும் கூட உங்களை சிங்களவர்கள் தள்ளித்தான் வைக்கிறார்கள். பிக்குகள் கோவில்கள், தேவாலயங்களை எதிர்பதில்லை. ஏன்?
    ஏனென்றால் ஒரு பழமொழி உள்ளது. "எதிரியை நம்பினாலும் காட்டிகொடுப்பவனை நம்பக்கூடாது".

    Please திருந்துங்கள். LTTE செய்த தவறுக்காக இந்த தலைமுறை தமிழர்களை பழிவாங்காதீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.