Header Ads



டொனால்டு டிரம்புக்கு எதிராக, பெண்கள் நிர்வாண போராட்டம்

கிளீவ்லேண்டில் உள்ள குடியரசுக் கட்சியின் தேசிய அலுவலகம் முன்பு திடீரென கூடிய 100க்கும் அதிகமான பெண்கள் டொனால்டு அதிபர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணாடியால் தங்களது உடலை மறைத்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடக்கிறது. அங்கு ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் பெரும் கோடீசுவரர் டொனால்டு டிரம்ப்பும் மோதுவது உறுதியாகி விட்டது.

டொனால்டு டிரம்ப் அதிபர் ஆவதற்கு அந்த நாட்டில் பெண்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிளீவ்லேண்டில் உள்ள குடியரசுக் கட்சியின் தேசிய அலுவலகம் முன்பு திடீரென கூடிய 100க்கும் அதிகமான பெண்கள் டொனால்டு அதிபர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணாடியால் தங்களது  உடலை மறைத்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். டொனால்டு வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு தகுதியற்றவர் என்று இவர்கள கருத்து தெரிவித்துள்ளனர்.

கிளீவ்லேண்டில் நிர்வாண ஆர்ப்பாட்டம் நடத்துவது சட்டத்திற்கு எதிரானது என்ற நிலையில் இவர்கள் நடத்திய போராட்டம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

No comments

Powered by Blogger.