Header Ads



அமெரிக்கா பயன்படுத்திய விமானத்தளத்தை, மீளக்கைப்பற்றியது துருக்கி


-Mohamed Jawzan-

துருக்கி அமெரிக்கா பயன்படுத்தி வந்த விமானபடை தளத்தை தனது கட்டுப்பாடில் கொண்டு வந்துள்ளது..

துருக்கி மீதான இராணுவ சதி புரட்சியின் எதிரொலியாக  துருக்கி விமான நிலையத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருவதை துருக்கி மக்கள் கடுமையாக எதிர்த்ததை அடுத்து இவ் விமான நிலையத்தை துருக்கி அதிபர் எர்டோகனின் உத்தரவின் கீழ் துருக்கி விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.. 

மற்றும்  இந்த விமான படை தளத்தின் அதிகாரி ஜெனரல் பெகிர் எர்கன் துருக்கி மீதான இராணுவ சதி புரட்சியில் அமெரிக்காவுடன் சேர்ந்து துருக்கி மக்களின் ஜனநாயக ஆட்சிக்கெதிராக இராணுவ  கூட்டு சதி குற்றத்தில் சம்பந்தப்பட்டார் என்று துருக்கிய அதிகாரிகளால்  கைது செய்து தடுத்து வைக்கப்பட்ட நிலையில் எழுந்த துருக்கி  மக்களின் கடும்  எதிர்ப்பை அடுத்து இந்த விமான நிலையத்தை துருக்கி அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது ..

மேலும்  அமெரிக்கா பயன்படுத்தி வந்த  இந்த விமான நிலைம் அணுவாயுதங்களை கொண்டதும் சிறியா மற்றும் ஈராக்கில் நிலை கொண்டு இருக்கும் ஜ எஸ் ஜ எஸ் படைகள் மீது தாக்குதல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வந்த மிகவும் முக்கியமான விமான தளமாகும் ..

விமான நிலையத்தை துருக்கி அரசு கைப்பற்றியதை போனிலும் தொலைக்காட்சியிலும் மக்களுக்கு  அறிவித்ததை தொடர்ந்து  அமெரிக்க விமானபடை அதிகாரிகள் தங்கி இருக்கும் நகரை முற்றுகையிட்ட துருக்கி மக்கள் அங்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையாக கோஷமிட்டவாறு உள் நுழைய முற்பட்டபோது அவர்களை துருக்கி பொலிஸார் சில தூர இடைவெளிக்கு தடுத்து நிறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிட்ட தக்கது

No comments

Powered by Blogger.