Header Ads



"இங்கையில் அல்குர்ஆனை, தடைசெய்வது குறித்து பேச்சுவார்தை"

(விடிவெள்ளி ARA.Fareel)

இலங்­கையில் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு ஒரு சட்டம் பெளத்­தர்­க­ளுக்கு ஒரு சட்டம் என்று இருக்க முடி­யாது. முஸ்­லிம்­களின் புனி­த­குர்­ஆனின் சட்­டங்கள் இலங்­கையின் சட்­டங்­க­ளுக்கு சில வகை­களில் முர­ணாக அமைந்­துள்­ளன.

பொது­ப­ல­சேனா அமைப்­புடன் இணைந்து சிங்­கள ராவய அமைப்பும் இலங்­கையில் குர்­ஆனை தடை செய்­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டுள்­ளது என சிங்­கள ராவ­யவின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்­துள்ளார். 

புனித குர்­ஆனை இலங்­கையில் தடை­செய்ய வேண்டும் என்ற பொது­ப­ல­சே­னாவின் ஆலோ­ச­னை­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்து வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யொன்­றிலே அக்­மீன தயா­ரத்ன தேரர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அறிக்­கை­யில்­மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்கை பல மதங்­களைக் கொண்ட நாடாக இருக்­கலாம். ஆனால் சட்­டங்கள் இனங்­களின் அடிப்­ப­டையில் வேறு­பட்­ட­தாக இருக்க முடி­யாது. அனை­வ­ருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டும். இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யான முஸ்லிம் சட்­டங்கள் இருக்­கின்­றன.

முஸ்லிம் ஆண் ஒரு­வ­ருக்கு நான்கு பெண்­களை மனை­வி­யர்­க­ளாக வைத்துக் கொள்ள முடி­கி­றது. இது இஸ்­லா­மிய சட்டம் இந்தச் சட்டம் பௌத்­தர்­க­ளுக்­குள்ளும் ஆதிக்கம் செலுத்தும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. ஒரு பௌத்தர் 4 மனை­வி­யர்­களை வைத்துக் கொள்ள வேண்­டு­மென்றால் அதற்­கென்றே மதம் மாறு­கிறார். இஸ்­லாத்­துக்கு மாறி நான்கு திரு­மணம் செய்து கொள்­கிறார். 

இலங்­கையில் முஸ்­லிம்கள் மாத்­திரம் தான் பள்­ளி­வா­சல்­களை மூடிக்­கொண்டு இர­க­சி­ய­மாக மத நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கி­றார்கள். ஏனைய இந்து, கிறிஸ்­தவ மதங்­களில் இவ்­வா­றல்ல அவர்­களின் வணக்க வழி­பா­டுகள் திறந்­த­ன­வாக அமைந்­துள்­ளன. எனவே பௌத்த மக்கள் முஸ்­லிம்கள் மீது சந்­தேகம் கொள்­வ­தற்கு இது கார­ணமாய் அமைந்­துள்­ளது. 

மனி­தப்­ப­டு­கொ­லை­களைப் புரியும் ஐ.எஸ்.மற்றும் ஜிஹாத் தீவி­ர­வா­திகள் அல்­லாஹு அக்பர் என்று கூறிக் கொண்டு குர்­ஆ­னையும் கையி­லேந்­தி­யி­ருக்­கின்­றனர். இது குர்ஆன் மீது சந்­தே­கத்தை உரு­வாக்­கி­யுள்­ளது.

குர்ஆன் தீவி­ர­வா­தத்­தையே போதிப்பதாக ஊகிக்க முடிகிறது. அதனால் குர்ஆன் தொடர்பில் சிங்கள ராவய பலஆய்வுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு குர்ஆன் தொடர்பாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக களமிறங்கி செயற்படும் என்றார்.

3 comments:

  1. This is mantal pepal in srilanka

    ReplyDelete
  2. "குர்ஆன் தொடர்பில் சிங்கள ராவய பலஆய்வுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு குர்ஆன் தொடர்பாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக களமிறங்கி செயற்படும்" என்றால் ஆய்வு எதற்கு? "எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக களமிறங்கி செயற்படும்" என்ற முடிவை எடுத்த பிறகு ஆய்வு எதற்கு?

    ReplyDelete
  3. Mr.Majeed Ahamed Lebbe you are trying to deny them to know the Quraan. Getting to know the Quraan is no harm instead who knows what Allah plans.

    ReplyDelete

Powered by Blogger.