சுவிசர்லாந்தில் இலங்கை முஸ்லிம்களின், நோன்புப் பெருநாள் (படங்கள்)
சுவிசர்லாந்தில் வாழும் இலங்கை முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் இன்று புதன்கிழமை 6 ஆம் திகதி சூரிச் - ஊர்டோப் மண்டபத்தில் நடைபெற்றது. ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையமும், மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசல் நிர்வாகமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. பள்ளிவாசல் தலைவர் ஹனீப் மொஹமட் தலைமையில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
இதில் சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களுடன் ஏனைய நாட்டு முஸ்லிம் சகோதரர்களும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. பெருநாள் தொழுகையில் இலங்கை மற்றும் உலக நாட்டு முஸ்லிம்களுக்காக துஆ பிரார்த்தனை நடைபெற்றதுடன், சிறுவர்கள் இஸ்லாமிய அறிவை மேம்படுத்தும் நோக்குடன் கேள்விகள் வினவப்பட்டு இணிப்புப் பண்டங்களும் வழங்கப்பட்டது.
Post a Comment