Header Ads



சிறைசாலையில் நாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார் - கூட்டாக சென்று பார்வையிட்டவர்கள் தெரிவிப்பு


வெலிக்கடை - மகசீன் சிறைசாலையில் உள்ள தனது மகன் நாமல் ராஜபக்சவை பார்வையிட அவரதுதாயார் சிரந்தி ராஜபக்ச மற்றும் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று -12- காலை அங்கு சென்றுள்ளார்.

மெகசின் சிறைச்சாலையில் நாமல் ராஜபக்ஸ மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அங்குள்ள கைதிகளுக்கு உடற்பயிற்சிகளை பயிற்றுவிப்பதாகவும் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்.

நேற்று நாமல் அதே போல் நாளை யார் கைது செய்யப்படுவார்கள் என்று இதன்போது கூட்டு எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, தினேஸ் குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, பந்துலகுணவர்தன, ரோஹித அபேகுணவர்தன, கீதா குமாரசிங்க, சிசிர ஜயகொடி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரஞ்சித் த சொய்சா, மஹிந்தானந்த அளுத்கமகே, உதயகம்மன்பில உள்ளிட்ட பலர் இன்று மகசீன் சிறைசாலைக்கு சென்றுள்ளனர்.

1 comment:

  1. Why on earth do we call SRILANKA IS A PARADISE ? Because
    it is a country where people love to be remanded !!!They
    go to prison with such joy , full of smiling face and
    such is the STANDARD OF LIVING IN THE PARADISE . It is a
    fun day for the hole family to get a prison uniform for
    a member !Hurrah !!! This is why we call it the Miracle
    of Asia !!! Even our prison is a HEAVEN . JAYAWEWA
    yahapalanaya .

    ReplyDelete

Powered by Blogger.