அரசியலில் தேரர்கள் ஈடுபடுவதும், தலையிடுவதும் பொருத்தமானதல்ல
தேரர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொருத்தமான விடயமல்ல என கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று (27) இடம்பெற்ற தேசிய பிரிவெனா தினத்தை முன்னிட்டு கண்டி கெட்டம்பே மைதானத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை தேரர்கள் அரசியலில் தலையிடுவதை தவிர்த்து, அதிலிருந்து விலகி நிற்பது சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
We welcome your stand.
ReplyDelete