Header Ads



பாதயாத்திரை மூலமாக, எண்ணங்களை திரிவுபடுத்த முயற்சி - சஜித்

வேறு நாடுகளின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்து காத்திருப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறுகின்றார். 

இலங்கை தற்போது விரைவான வளர்ச்சியடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். 

இதன்காரணமாக எதிர்காலத்தில் பல தொழில் வாய்ப்புக்கள் உருவாகும் என்று அவர் கூறியுள்ளார். 

கூட்டு எதிர்க்கட்சியினால் இவை அனைத்தையும் இல்லாமல் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். 

பாதயாத்திரை மூலமாக, இந்த நாட்டிற்கு வரும் முதலீட்டாளர்களின் எண்ணங்களை திரிவுபடுத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறுகின்றார். 

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு உரையாற்றியுள்ளார். 

No comments

Powered by Blogger.