Header Ads



புதிய அரசமைப்பு சட்டத்தை இயற்ற, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட தயார்


துருக்கியில் புதிய அரசமைப்பு சட்டத்தை இயற்றுவதற்கு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் பினாலி யில்திரிம் திங்கள்கிழமை கூறியதாவது,

புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியை, அனைத்து முக்கியக் கட்சிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளவிருக்கின்றன.

அதிபர் எர்டோகன் மற்றும் இரு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டது.

இந்த மாதம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டதையடுத்து, வரைவு அரசமைப்புச் சட்டத்தில் சிறு திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

துருக்கியில் புதிய அரசமைப்புச் சட்டத்தை இயற்றுவதில் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், இந்த விவகாரத்தில் பல மாதங்களாக இழுபறி நீடித்து வருகிறது.

No comments

Powered by Blogger.