அமெரிக்கா பயன்படுத்தும் துருக்கிய விமானத்தள, தளபதியும் ராணுவ சதி முயற்சியில் கைது
-BBC-
துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு விவகாரத்தில் துருக்கி ராணுவத்தில் உள்ள அதிபருக்கு நெருங்கிய உயர் மட்ட உதவியாளர் ஒருவருக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்சிர்லிக் விமான தளத்தின் தளபதியும் அதில் அடங்குவார் என்றும் துருக்கி நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் அமெரிக்கா இந்த விமான தளத்தை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த விமான தளத்திலிருந்து ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதாக பென்டகன் அறிவித்துள்ளது.
Post a Comment