Header Ads



அதிவேகப்பாதையில் அதிக மது போதையில், வாகனம் செலுத்திய பிக்கு விபத்து

அதிக மது போதையில் பிக்கு ஒருவர் செலுத்திய காரானது நேற்றைய -14- தினம் வெலிப்பன்ன பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெலிப்பன்ன - முனமல்வத்த பகுதியில் கார் ஒன்று நேற்றைய தினம் விபத்துக்குள்ளாகியிருந்ததை கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார் அங்கு பிக்கு ஒருவர் காயமடைந்த நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.

குறித்த பிக்குவே அதிக மதுபோதையில் காரினை செலுத்தி வந்துள்ளதாக அறிந்துக்கொண்ட பொலிஸார் குறித்த பிக்குவை கைது செய்துள்ளனர்.

எனினும் குறித்த பிக்குவை எச்சரிக்கையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெலிப்பன்ன பிரதேசத்தின் விகாரை ஒன்றைச் சேர்ந்த குறித்த பிக்கு சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டே இவ்வாறு மது அருந்திய பின்பு தனது காரில் அதிவேகப்பாதையில் பயணிக்கும் பொருட்டு வெலிப்பன்ன நுழைவாயிலுக்குள் நுழைய முற்படுகையிலே இந்த விபத்து இடம்பெற்றிருப்பதாகவும் வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.