Header Ads



சாலாவ ஆயுதக் கிடங்கை, அரசாங்கமே வெடிக்கச் செய்தது - விமல்

அரசாங்கமே சாலாவ ஆயுதக் கிடங்கை வெடிக்கச் செய்தது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

பெலியத்தவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

இன்று பாருங்கள் சாலாவ ஆயுதக் களஞ்சியத்திற்கு என்ன செய்தார்கள் என்று? ஆயுதக் களஞ்சியம் வெடிக்கச் செய்யப்பட்டது. அந்த ஆயுதக் களஞ்சியம் வெடிக்கச் செய்யப்பட்டு அடுத்த நாளே மேலதிக வெடிபொருட்கள் அழிக்கப்படும் என அமைச்சர் சாகல ரட்நாயக்க கூறினார்.

இதன் அடிப்படையிலேயே வியங்கொட ஆயுதக் களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக ஆயுதங்கள் பல திருகோணமலை கடலில் போடப்பட்டது.

கோடிக் கணக்கான ஆயுதங்களை இந்த அரசாங்கம் அழித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மக்கள் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சää முன்னாள் சபாநாயகர் சமால் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.