Header Ads



ஏழு கன்னி மலைக்கு சென்ற, மாணவர்களை காணவில்லை - தீவிர தேடுதல் ஆரம்பம்

-JM.Hafeez-

மஸ்கெலியா, ஏழு கன்னி மலைக்கு சென்றிருந்த களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர், அம்மலையிலிருந்து கீழிறங்காது முடியாது வழித்தவறிச் சென்றுவிட்டதாக ஒருவரின் அலைபேசியிலிருந்து கிடைத்த குறுஞ்செய்தி தெரிவித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்வாறு வழித்தவறியோரில், வெளிநாட்டு மாணவர்கள் இருவர் இருப்பதாகவும் அறியமுடிகின்றது. அவ்விருவரும் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்தவர்கள் என்று அறியமுடிகின்றது. அதிலொருவர் பெண் என்றும் தெரியவந்ள்ளது.

காணாமல் போனதாகக் கூறப்படும் இந்த ஐந்து மாணவர்களையும் தேடும் நடவடிக்கைகளில், இராணுவத்தினரும் விமானப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஐவரும், நேற்றுச் சனிக்கிழமை மாலைவரையே அம்மலையில் தங்கியிருப்பதற்குச் சென்றதாகவும், கடும் மழைக்காரணமாக மலையிலிருந்து கீழே இறங்கமுடியாத நிலைமை ஏற்பட்டதாகவும் அறியமுடிகின்றது. 

வழித்தவறிய மாணவர்களில் ஒருவரின் அலைபேசியிலிருந்து கிடைத்த குறுஞ்செய்தியை வைத்துக்கொண்டே அவர்களை தேடும் நடவடிக்கைகளில், படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அந்த ஐவரையும் மீட்டு, மலைக்கு கீழே கொண்டுவரும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.