Header Ads



புதிய தேர்தல் முறையின் கீழ், அடுத்த தேர்தல் - ஜனாதிபதி மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய தேர்தல் முறையின் கீழ் அடுத்த தேர்தல் இடம்பெறும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சிரேஸ்ட உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சிரேஸ்ட உறுப்பினர்களுடன் இடம் பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு இலங்கை மன்ற கல்லூரியில் நேற்றிரவு இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் கட்சியின் சீர்திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளப்பட்டது என கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடலின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.