கரு ஜெயசூரியவை விமானத்தில், ஏற்றமறுத்த எமிரேட்ஸ் அதிகாரிகள்
சபாநாயகர் கரு ஜெயசூரிய சுகவீனத்துக்காக தற்போது சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று வருகிறார்.
கடந்த 10ம் திகதியன்று அவர் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை மருத்துவமனையின் உரிய விடுகைப் பத்திரம் இல்லாமை காரணமாகஅவரின் சிங்கப்பூர் பயணம் 10 மணித்தியாலங்கள் தாமதித்தே மேற்கொள்ளப்பட்டதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் சுகவீனத்துடன் அவரை சிங்கப்பூருக்குஅழைத்துச் செல்வதில் மருத்துவரீதியில் பிரச்சினைகள் இருப்பதாக எமிரேட்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே அவர் சிகிச்சை பெற்ற வைத்தியசாலையில் இருந்துமருத்துவ விடுகைப் பத்திரம் தேவை என்று அவர்கள் வலியுறுத்தினர்.
எனினும் கரு ஜெயசூரியவின்மகள், சுமார் 20 வருடங்கள் மருத்துவராக தொழில் செய்யும் நிலையில் தமது தந்தைக்குவிமானத்தில் மருத்துவ உதவி, முக்கியமாக ஒக்சிசன் தேவையில்லை என்றும் அவர்,வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீடு வந்த பின்னரே சிங்கப்பூருக்கு செல்வதாகவும் தெரிவித்தார்.
இதனை விமான அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில்கரு ஜெயசூரிய செல்ல வேண்டிய விமானம் புறப்பட்டு செல்லவே அடுத்த விமானம் வரும் வரையில் காத்திருக்க வேண்டியேற்பட்டது.
இதன்போது அவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சுமார்10 மணித்தியாலங்கள் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment