Header Ads



கல்முனை கடற்கரை வீதியில் பெருநாள் தொழுகை (படங்கள்)

(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாயல்,  கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாயல் ஆகியன இணைந்து கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் இடம்பெற்ற  புனித நோன்புப் பெருநாள் நபி வழித் தொழுகை, ஆயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் இன்று (07) புதன் கிழமை இடம்பெற்றது.

காலை 6.30 மணிக்கு ஆண் பெண் இருபாலாருக்கும் ஒரே ஜமாஅத்தாக இடம்பெற்ற  இத்தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலின் பேஷ் இமாம் மௌலவி ஏ.எல்.எம். ஸபீர் நடாத்திவைத்தார். 




No comments

Powered by Blogger.