Header Ads



"குரோதத்தை விதைக்க, பௌத்தத்தை பயன்படுத்தும் பிக்குகள்"


அரசியல் தலைவர்கள் பௌத்த மதத்தை துஸ்பிரயோகம் செய்கின்றனர் என நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் தலைவர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ லுனாவ பௌத்த விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

இன்று எமக்குத் தெரியும் அரசியல் தலைவர்கள் அரசியல் தேவைகளுக்காக பௌத்த மதத்தை துஸ்பிரயோகம் செய்கின்றனர்.

மிகவும் ரம்மியமான உன்னதமான இந்த பௌத்த தர்மதத்தை சில பௌத்த பிக்குகள் குரோதத்தை விதைக்க பயன்படுத்திக் கொள்கின்றனர்.

நாட்டின் சமாதானம், ஒற்றுமையை முன்னிலைப்படுத்தியே ஜனவரி மாதம் 8ம் திகதி 62 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்தனர் என்பதனை பிரதமருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

பிரதமரும் ஜனாதிபதியும் தைரியமான தீர்மானங்களை எடுத்து மீளவும் நாட்டில் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதனை தடுக்க வேண்டும் என பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமரும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. This is the reality about Buddhism

    ReplyDelete
  2. இவர் ஒரு உண்மையான மனிதன்

    ReplyDelete

Powered by Blogger.