Header Ads



துருக்கியில் துரோகிகளுக்கான, களையெடுப்பு தீவிரம்


துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு அரசின் பதில் நடவடிக்கையாக, ஆயிரக்கணக்கான அதிகாரிகள் மீதான களையெடுக்கப்பு தொடர்கிறது.

7 ஆயிரத்துக்கும் மேலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 103 தளபதிகள் மற்றும் கடற்படை தளபதிகளும் அடங்குவர் என்று துருக்கி பிரதமர் பினாலி யில்டிரிம் தெரிவித்துள்ளார்.

3 மில்லியன் அரசு ஊழியர்களின் ஆண்டு விடுமுறையையும் ரத்து செய்துள்ளார் யில்டிரிம்.

ஐந்தில் ஒரு பங்கு நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 ஆயிரம் போலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.