நாமல் ராஜபக்ஸவின் குற்றச்சாட்டு
தனதும், தனது சகோதரர்களுக்கும் சொந்தமான ஹெலிகொப்டர்,லம்போகினி,தங்கக் குதிரைஎன்பவற்றை கூடிய சீக்கிரம் அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று -08- களுத்துரையில் இடம்பெற்ற மக்கள் ஒன்று கூடல் நிகழ்வின் போதே அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று வரை தனது தாய் மீது கூட முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனது இளைய சகோதரர் மீது மட்டுமே இதுவரை வழக்கு தொடரப்படவில்லை என்றும்தெரிவித்துள்ளார்.
தன்னுடைய இளைய சகோதரர் போன்ற இளையவர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலோ, உயர்நீதி மன்றிலோ வழக்கு தொடர்வது அவர்களுக்கு அகௌரவமான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த அரசாங்கம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவை சிறிகொத்தாவின் கிளையாக்கியுள்ளதாகவும்,அது கூட்டு எதிர்கட்சியினரின் மரண தண்டனைமத்தியநிலையமாக மாறியுள்ளதாகவும், குறித்த ஆணைக்குழு மூலம் கூட்டுஎதிர்கட்சியினர் மாத்திரமே தண்டிக்கப்படுவதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.
மேலும் முன்பெல்லாம் நாமலுடைய ஹோட்டல் என்று குறிப்பிட்டவைக்கு இன்று தான்சென்று உணவருந்திவிட்டு பணம் செலுத்துவதாகவும், தான் கட்டியதாகக் கூறப்பட்ட ஹம்பாந்தோட்டை ஹோட்டலை இன்று இவர்கள் வெட்கமின்றி போய் திறந்து வைப்பதாகவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் காலங்களில் தடல்புடலாக லம்போஐினி கார்கள் விமான நிலையத்தில் பாரிய விமானங்களில் ஏற்றப்படுவதையும் கப்பல் இறங்கு துறைகளில் தடல்புடலாக லம்போஐினிகள் கப்பல்களில் ஏற்றப்படுவதையும் பொதுமக்களாகிய நாம் பார்த்துக் கொண்டிருந்தோம்.அவைகள் எங்கே போய் ஒளிந்துவிட்டன என்பது அனைவரையும் விட உமக்குத்தான் நன்கு தெரியும்.இப்போது அவற்றின் பைல்கள் அனைத்தும் ஸீஐடி,பொலிஸ் போன்றவற்றில் பூரணமாக அகற்றிய பின் உமக்கு இதுவல்ல மேலும் சுத்தம் பேசலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு சக்தி உன்னையும் என்னையும் எல்லா மக்களையும் பார்த்துக் கொண்டு சகலவற்றையும் நிர்வகித்துக் கொண்டிருக்கின்றான் என்பது உனக்கும் உன்னைப் போன்ற சர்வதேச கள்வர் கூட்டங்களும் தெரியாமல் அல்லது உண்மையை எவ்வளவு காலம் மறைக்க முடியும் என்பதை காலம் நிச்சியம் தீர்மானிக்கும்.
ReplyDelete