Header Ads



நல்லாட்சி அரசாங்கத்தை, மகிந்தவினால் ஒன்றும் செய்யமுடியாது - இம்ரான்

அரசை கவிழ்க்க தெரிந்தால் ஏன் தனது மகன்மார் கைதுசெய்யப்ப்படும்வரை காத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்.

அரசை கவிழ்ப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ  தெரிவித்த கருத்து தொடர்பாக நேற்று (13) மாலை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் விளக்கமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இவ்வரசை கவிழ்ப்பதாக கூறிக்கொண்டு கூட்டுஎதிர்கட்சியினர் மக்கள் முன் தவறான கருத்துகளை அவர்கள் சார்பான ஊடகங்களை பயன்படுத்தி பரப்பி வருகின்றனர் அவர்கள் எம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவர்கள் அமைச்சர்களாக இருக்கும்போது செய்தவை இப்போது அவர்களாகவே அதை வெளிக்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் ஒருவருக்கு ஒரு வாகனம் கொள்வனவு செய்தது வீண்செலவாக தெரிந்த விமல் வீரவங்சவுக்கு தனது அமைச்சுக்கு 30 க்கு மேற்பட்ட வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி மாதாந்தம் கோடிக்கணக்கில் வாடைகை செலுத்தியது அத்தியவசியம்.

அரசை கவிழ்ப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஊடகங்கள் முன்னிலையில் கூறுகிறார் அவ்வாறு அவருக்கு அரசை கவிழ்க்க தெரிந்திருந்தால் ஏன் தனது மகன்மார் கைதுசெய்யப்ப்படும்வரை காத்திருக்க வேண்டும்.

நேற்றோ நேற்று முன்தினமோ அரசை கலைத்து நாமல் ராஜபக்‌ஷ சிறைக்குச் செல்வதை தடுத்திருக்கலாம்.

தனிக்கட்சி ஆரம்பிக்கபோகிறேன் என்று தோல்வியடைந்ததில் இருந்து கூறித்திரிகிறார். இன்று வரை ஒன்றையும் காணவில்லை அதே போன்றுதான் இவரால் தனிக்கட்சியும் ஆரம்பிக்க முடியாது அரசையும் கவிழ்க்க முடியாது

கண்டியில் இருந்து கொழும்பு வரையல்ல இவர்கள் காங்கேசன்துறையிலிருந்து தேவேந்திரமுனை வரை பாத யாத்திரை சென்றால் கூட இவர்களால் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள கைதுகளையோ நல்லாட்சி அரசையோ ஒன்றும்செய்ய முடியாது  என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

5 comments:

  1. Dear Imran

    The people in your village sent you to parliament to only talk about their problems and fulfill their needs.

    But you did nothing for them.

    First you should completely fulfill your district people's needs, requirements and problems.

    After resolve your home problems than you can talk about presidents level politics.

    Be smart! When people wake up you can't cook your dirty food.

    Thank you

    ReplyDelete
    Replies
    1. How do you know he did not do anything??.. you post a totally jealousy post in another's name.. if you are a Trincomalee's plz ask about him.. I give suggest you to go ACMC leader or SLMC leader.. or visit imran 's office..

      Delete
  2. Imran Maharoof is young and new to parliament as an MP. He will learn his lessons as time goes, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart/former SLFP District Organizer - Trincomalee District and Convener - The Muslim Voice.

    ReplyDelete
    Replies
    1. How long you being telling the same recorded tape.. did you find anything wrong his statement??

      Delete

Powered by Blogger.