அரசாங்க வாகனங்களை ராவனா பலயவுக்கு, வழங்கிய விமல் வீரவன்ச
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, கட்டுமான மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சராக இருந்த காலத்தில், ராவனா பலய அமைப்பிற்கு 7 அரசாங்க வாகனங்களை வழங்கியுள்ளதாக பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இலங்கை பொறியியலாளர் திணைக்களத்தின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட வாகனங்களில் 7 வாகனங்களையே இவ்வாறு ராவனா பலயவிற்கு விமல் வீரவன்ச வழங்கியுள்ளார்.
குறித்த வாகனங்களை பெற்று கொண்ட ராவனா பலயவின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், குறித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.
Post a Comment