Header Ads



தௌஹீத் ஜமாத் ஏற்பாடு செய்த பெருநாள் தொழுகை

-அனா-

இன்று (புதன்கிழமை) 06.07.2016 உலக முஸ்லீம்கள் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். இதன் அடிப்படையில் கல்குடா தௌஹீத் ஜமாத் ஏற்பாடு செய்த பெருநாள் தொழுகையும் கொத்பா பிரசங்கமும் ஓட்டமாவடி – செம்மண்ஓடை அல் - ஹம்ரா வித்தியாலய மைதனாத்தில் காலை 06.20க்கு இடம் பெற்றது.

பெருநாள் தொழுகையையும் கொத்பா உரையினையும் கல்குடா தௌஹீத் ஜமாத்தின் பொதுத் தலைவர் மௌலவி ஏ.எல்.பீர்முஹம்மது (காசிமி) நடாத்தி வைத்ததுடன் ஓட்டமாவடி, வாழைசN;சனை, மீறாவோடை, செம்மண்ஓடை, மாவடிச்சேனை, பிறைந்துரைச்சேனை, காவத்தமுனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களது பெருநாள் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டனர்.


No comments

Powered by Blogger.