Header Ads



தனியாரிடம் இரத்த பரிசோதனை, முற்றாக தடை செய்யப்படும்

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் அரச வைத்தியசாலைகள் சிகிச்சை பெறும் நோயாளிகள் தனியாரிடம் இரத்த பரிசோதனை செய்து நடைமுறை முற்றாக தடை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஆய்வு கூடங்கள் இருக்கும் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் இரத்தத்தை பரிசோதிக்கும் இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அமைச்சர் ராஜித இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படும் நோயாளர்கள் தனியாரிடம் இரத்த பரிசோதனை செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் தனியாரிடம் இரத்த பரிசோதனை செய்து கொள்வதை நிறுத்த முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.