Header Ads



தான் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையை, பார்வையிட்டார் மைத்திரி (படங்கள்)


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு சிறைச்சாலையை பார்வையிட்டுள்ளதுடன், 1971ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒன்றரை வருட காலமாக தான் சிறைப்பட்டிருந்த சிறைச்சாலையையும் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

நேற்று (10) மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி மாலை வேளை குறித்த மட்டக்களப்பு சிறைக்கூடத்திற்கும் விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது தான் சிறைவைக்கப்பட்டடிருந்த சிறைக்கூடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி அங்கு வருகைத்தந்த விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களுடன் தனது சிறைவாச அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி தான் மூன்று மாதம் அந்த சிறைக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

1971ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கலவரத்தில் தான் சம்பந்தப்படாமல் இருந்த போதும் அன்றைய கால கட்டத்தில் தான் சிறைவாசம் இருந்து, சிறையில் கொடுக்கப்படும் உணவை உண்ணவேண்டியிருந்ததாக தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.


No comments

Powered by Blogger.