Header Ads



அனுராதபுரத்தில் கொம்பன் பிடிபட்டது


அனுராதபுரம் - திறப்பனை பிரதேசத்தில் பல கிராமங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த கொம்பன் யானையை மயக்க மருந்து செலுத்தி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று -03-  காலை பிடித்துள்ளனர்.

நான்கு நாட்களாக இந்த யானையை பிடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த யானை சில தினங்களுக்கு முன்னர், 54 வயதான பெண்ணை தாக்கி கொன்றுள்ளது.

அந்த பெண் இறந்த இடத்திலேயே இந்த யானை இன்று பிடிப்பட்டது.

இதனையடுத்து யானையை பிடிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்மை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.