Header Ads



சுகயீனம் என கூறி, மருந்தகத்திற்குச் சென்று, வைத்தியரை அச்சுறுத்தி சூறையாடல்

ஹம்பாந்தோட்டை - ரண்ண பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் பணம் மற்றும் தங்க நகைகளை சூறையாடிய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரண்டு சந்தேகபர்கள் தனக்கு சுகயீனம் என்று கூறி, குறித்த மருந்தகத்திற்குச் சென்று அங்குள்ள வைத்தியரை அச்சுறுத்தி வைத்தியரிடம் இருந்த 18 ஆயிரம் ரூபா பணத்தையும், தங்க நகைகளையும் சூறையாடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பல குற்றச்சாட்டுக்கள் காரணமாக இதற்கு முன்னரும் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் தற்போது பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களை இன்று அங்குனகொலபெலஸ்ஸ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.