Header Ads



வற் வரி அதிகரிப்பை, உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியது

பெறுமதி சேர் வரியை அதிகரித்து உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் வெளியிட்டிருந்த உத்தரவை உயர் நீதிமன்றம் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது.

11 வீதமாக இருந்த பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அதிகரிக்க அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்து. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே உயர்நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதேவேளை இப் பெறுமதி சேர் வரி அதிகரிப்பிற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.