Header Ads



ரகசியங்களை வெளியிடுவேன் - மிரட்டும் அப்ரிடி

பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு எப்படி மோசமான நிலையில் உள்ளது என்பது குறித்து ஓய்வு பெற்ற பின்னர் வெளியிடுவேன் என அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி மிரட்டல் விடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அப்ரிடி அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள சில வீரர்களை விட சிறந்த முறையில் விளையாடினேன் என உணர்ந்தேன். அதனால் ஐ.சி.சி. டி20 உலக கோப்பை போட்டிக்கு பின் கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெறவில்லை. அணியில் இருந்து விலகும்பொழுது அது தகுதியுடைய ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்பினேன்.

நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு எப்படி மோசமான நிலையில் உள்ளது என்பது குறித்து ஓய்வு பெற்ற பின்னர் வெளியிடுவேன். கிரிக்கெட் நிர்வாகம் நிறைய தவறுகளை செய்துள்ளது. வீரர்களின் தரம் சர்வதேச அளவில் சிறந்திருக்கவில்லை. அதிக தகவல்களை கூற விரும்புகிறேன். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் உள்ள தொடர்பினால் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.