Header Ads



மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல் தாக்குதல், பயங்கரவாதியின் பெயர் வெளியீடு

மதீனா மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு வெளியில் தற்கொலை தாக்குதல் நடத்தியவரின் பெயரை சவூதி அரேபிய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

திங்களன்று இடம்பெற்ற இந்த தாக்குதலை நடத்தியவர் 26 வயது நயிர் முஸல்லம் ஹம்மத் அல் நிஜைதி என்று உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவர் கடந்த காலங்களில் போதைப் பொருள் குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்தவர் என்று அது குறிப்பிட்டுள்ளது.

தவிர கிழக்கு நகரான காதிபில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் பின்னணியில் இருந்த மூவரின் பெயரையும் சவூதி வெளியிட்டுள்ளது. இவர்களில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட 23 வயது அப்துல்ரஹ்மான் சலேஹ் முஹமது அல் ஆமரும் அடங்குகிறார். இவர் தீவிரவாதத்துடன் தொடர்புபட்ட கைதிகளை விடுவிக்கக் கோரிய கும்பலுடன் தொடர்புபட்டதற்காகவே கைது சொய்யப்பட்டிருந்தார்.

இதில் எவரும் சவூதி அடையாள அட்டையை பெற்றவர்கள் அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களுடன் தொடர்புபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டிருப்பதோடு இதில் 12 பேர் பாகிஸ்தான் நாட்டவர்களாவர். 

No comments

Powered by Blogger.