Header Ads



ஜம்­இய்­யத்துல் உலமா, வன்­மை­யாகக் கண்­டிக்கிறது..!


மதீ­னாவில் நபிகள் நாயகம் (ஸல்) நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்ள மஸ்­ஜிதுந் நபவி பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டு தாக்­கு­தலை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளது. 

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் வெளி­யிட்­டுள்ள கண்­டன அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

'ரமழான் மாதத்தின்  இறுதி நாளில் முஸ்­லிம்­களின் புனித இட­மான முஸ்­ஜிதுல் நபவி பள்­ளி­வா­ச­லுக்கு முன்பு அப்­பாவி மக்­களை இலக்­கு­வைத்து தீவி­ர­வா­திகள் மேற்­கொண்ட தற்­கொலை குண்டு தாக்­கு­தலில் 5 பேர் பலி­யா­கி­யி­ருக்­கி­றார்கள். 

இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை எதிர்க்­கி­றது. எனவே இதனை யார் செய்­தாலும் இஸ்­லாத்தை மீறிய செய­லாகும். தீவி­ர­வாத செயல்­க­ளினால் மக்­களைக் கொல்­வ­தினால் தமது இலக்­கினை அடைந்­து­கொள்ள முடி­யாது என்­பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக உலகின் அனைத்து முஸ்லிம் நாடு­களும் ஒன்­றி­ணைய வேண்டும். இவ்­வா­றான தீவி­ர­வாத செயல்­களே முஸ்­லிம்­களைப் பற்றி ஏனைய சமூகங்கள் தவறான கருத்துக்களைக் கொள்வதற்கு காரணமாக அமைகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.  

2 comments:

  1. Why don;t you consider the killing more than 200 innocent civilians at Iraq

    ReplyDelete

Powered by Blogger.