Header Ads



பொலிஸ்மா அதிபரின் சீருடையைக் கழற்றி, சிறுவர்களிடம் வழங்குமாறு விமல் வீரவன்ச கோரிக்கை

கூட்டு எதிர்கட்சியினரின் பாத யாத்திரை நேற்று காலை பேராதெனியவில் ஆரம்பமாகி மாவனெல்ல நகருக்கு அண்மித்த பகுதியில் முடிவடைந்தது.

இதன்போது அங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பொலிஸாரையும் பொலிஸ்மா அதிபரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் சீருடையைக் கழற்றி, சிறுவர்களிடம் வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பாத யாத்திரையின் போது அம்பியூலன்ஸ் வண்டி தாக்கப்பட்டதாக சில ஊடகங்கள் பொய்யான செய்தியை பரப்பின. ஆனால் அவ்வாறான எந்தவொரு தாக்குதலும் அங்கு இடம்பெறவில்லை என விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்றைய பாத யாத்திரையின் போது பொலிஸார் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாகவும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவே போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளை செய்ததாகவும் விமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே கடமைகளை செய்ய முடியாத பொலிஸாருக்கு சீருடை எதற்கு என்றும், அதனை கழற்றி சிறுவர்களுக்கு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாக வீரவன்ச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.