இலங்கை ஹாஜிகளின் நலன்களை கவனிக்க விசேட திட்டம்
-விடிவெள்ளி ARA.Fareel-
ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக சவூதி அரேபியாவைச் சென்றடையும் இலங்கை ஹஜ்ஜாஜிகளின் நலன்களைக் கவனிப்பதிலும் உதவிகள் வழங்குவதிலும் சவூதி அரேபியா ரியாத்திலுள்ள இலங்கை தூதரகமும் ஜித்தாவிலுள்ள கொன்சியூலர் அலுவலகமும் முக்கிய கவனம் செலுத்தும் என ஜித்தாவுக்கான கொன்சியூலர் நியமனம் பெற்றுள்ள பைசல் மக்கீன் உறுதியளித்துள்ளார்.
கொன்சியூலராக நியமிக்கப்பட்டுள்ள பைசல் மக்கீன் எதிர்வரும் 30 ஆம் திகதி நாளை ஜித்தாவிலுள்ள அலுவலகத்தில் தனது கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார்.
கொன்சியூலர் பைசல் மக்கீனுக்கும் அரச ஹஜ் குழு உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் மாலை முஸ்லிம் சமயவிவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சில் நடைபெற்றது.
அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு உறுதியளித்தார். அவர் தொடர்ந்தும் கலந்துரையாடலில் விளக்கமளிக்கையில்,
ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக சவூதி அரேபியாவைச் சென்றடையும் இலங்கை ஹஜ்ஜாஜிகளின் நலன்களைக் கவனிப்பதிலும் உதவிகள் வழங்குவதிலும் சவூதி அரேபியா ரியாத்திலுள்ள இலங்கை தூதரகமும் ஜித்தாவிலுள்ள கொன்சியூலர் அலுவலகமும் முக்கிய கவனம் செலுத்தும் என ஜித்தாவுக்கான கொன்சியூலர் நியமனம் பெற்றுள்ள பைசல் மக்கீன் உறுதியளித்துள்ளார்.
கொன்சியூலராக நியமிக்கப்பட்டுள்ள பைசல் மக்கீன் எதிர்வரும் 30 ஆம் திகதி நாளை ஜித்தாவிலுள்ள அலுவலகத்தில் தனது கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார்.
கொன்சியூலர் பைசல் மக்கீனுக்கும் அரச ஹஜ் குழு உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் மாலை முஸ்லிம் சமயவிவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சில் நடைபெற்றது.
அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு உறுதியளித்தார். அவர் தொடர்ந்தும் கலந்துரையாடலில் விளக்கமளிக்கையில்,
இலங்கையிலிருந்து
சவூதி சென்றடையும் ஹஜ்ஜாஜிகளுக்கான சகல உதவிகளையும்
ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளும் ஜித்தா கொன்சியூலர்
அலுவலக அதிகாரிகளும் வழங்குவார்கள்.
இலங்கையிலிருந்து ஹஜ் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஜித்தா விமானநிலையம் சென்றடையும் ஒவ்வொரு விமானத்தின் ஹஜ் பயணிகளுக்கு உதவுவதற்காக 2 அதிகாரிகள் வீதம் விமான நிலையத்தில் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அவர்கள் இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் பயணப்பொதி கையாளல் உட்பட அனைத்து விடயங்களிலும் உதவி வழங்குவார்கள். தேவையான ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.
இதனால் ஹஜ்ஜாஜிகள் விமானநிலையத்தில் அதிகநேரம் தரித்திராது. தமது கடமைகளை முடித்துக் கொண்டு வெளியேறக் கூடியதாக இருக்கும்.
இலங்கை ஹஜ்ஜாஜிகளை அடையாளம் காண்பதற்காக யாத்திரிகர்களுக்கு விசேட அடையாள சின்னமொன்றும் வழங்கப்படவுள்ளது. அவர்கள் அதனை தங்களது கரங்களில் அணிந்து கொள்ள வேண்டும் என்றார்.
ஹஜ்குழு உறுப்பினர்களும் ஹஜ் குழுத்தலைவரும் கொன்சியூலரின் நியமனத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
ஹஜ் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான மௌலவி எம்.எஸ்.எம்.தாஸிம் இலங்கையைப் பிரதிநிதிப்படுத்தும் கொன்சியூலர் சவூதி அரசாங்கத்திடமிருந்து மனிதாபிமான உதவிகளைப் பெற்று இலங்கை மக்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென வேண்டிக்கொண்டார்.
இலங்கையிலிருந்து ஹஜ் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஜித்தா விமானநிலையம் சென்றடையும் ஒவ்வொரு விமானத்தின் ஹஜ் பயணிகளுக்கு உதவுவதற்காக 2 அதிகாரிகள் வீதம் விமான நிலையத்தில் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அவர்கள் இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் பயணப்பொதி கையாளல் உட்பட அனைத்து விடயங்களிலும் உதவி வழங்குவார்கள். தேவையான ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.
இதனால் ஹஜ்ஜாஜிகள் விமானநிலையத்தில் அதிகநேரம் தரித்திராது. தமது கடமைகளை முடித்துக் கொண்டு வெளியேறக் கூடியதாக இருக்கும்.
இலங்கை ஹஜ்ஜாஜிகளை அடையாளம் காண்பதற்காக யாத்திரிகர்களுக்கு விசேட அடையாள சின்னமொன்றும் வழங்கப்படவுள்ளது. அவர்கள் அதனை தங்களது கரங்களில் அணிந்து கொள்ள வேண்டும் என்றார்.
ஹஜ்குழு உறுப்பினர்களும் ஹஜ் குழுத்தலைவரும் கொன்சியூலரின் நியமனத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
ஹஜ் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான மௌலவி எம்.எஸ்.எம்.தாஸிம் இலங்கையைப் பிரதிநிதிப்படுத்தும் கொன்சியூலர் சவூதி அரசாங்கத்திடமிருந்து மனிதாபிமான உதவிகளைப் பெற்று இலங்கை மக்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென வேண்டிக்கொண்டார்.
Post a Comment