இணையத்தளம் ஊடாக சிறுவர்களுக்கு ஏற்படும், இன்னல்களை அறிவிக்க..!
இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக சிறுவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகளை 077 322 00 32 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கமுடியும்.
தொலைபேசி இலக்கத்திற்கு மேலதிகமாக குறுந்தகவல் ஊடாகவும் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகளை தெரிவிக்கமுடியும்.
மேலும் சிறுவர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment