மஹிந்த தலைமையிலான பாதயாத்திரை, அருவருக்கத்தக்க செயலுடன் இன்று முடிவடைந்தது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பாதயாத்திரையின் முதலாவது நாள் மாவனெல்ல கனேதென்ன பகுதியில் நிறைவுக்கு வந்துள்ளது.
பேரணி இன்று காலை பேராதெனிய பாலத்துக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2
பாதயாத்திரை ஆரம்பமானபோது விகாரைக்கு முன்னால் உள்ள வீதியால் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி மீது பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அரசுக்கு எதிராகவும் நாட்டு மக்களை பாதுகாக்கவும் முன்னெடுக்கப்பட்ட குறித்த பாதயாத்திரையின் போது இவ்வாறான சம்பவம் ஏற்பட்டுள்ளமையானது மிகவும் அருவருக்கத்தக்க செயலாக காணப்படுகின்றது.
குறித்த அம்பியூலன்ஸ் வண்டியின் கண்ணாடி உடைக்கப்பட்டதுடன் வண்டியினுள் இருந்த நோயாளி மற்றும் சாரதியை பேரணியிலீடுபட்டோர் அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Nagareekam theriyatha kaaddumirandikal.
ReplyDeleteBloody taster
ReplyDelete