Header Ads



ஷீயாக்களின் அஹ்லுல் பைத் நாடகமும், இஸ்லாத்தை குழிதோண்டி புதைக்கும் நோக்கமும்..!

-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி-

ஷீயாக்கள் நமது உத்தம சஹாபாக்கள்  நபியவர்களின் மரணத்துக்குப் பின் முர்தத்துகளாகி விட்டார்கள் என்ற கருத்தை முன்வைப்பதற்காகவே இந்த அஹ்லுல் பைத் என்ற போலி நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்

அஹ்லுல் பைதினரை நேசிப்பதாகச் சொல்லும் இவர்கள் உண்மையில் அஹ்லுல் பைதை நேசிப்பதாகத் தெரியவில்லை உண்மையில் இந்த போலி கோஷத்தினூடாக இலங்கையில் செல்வாக்குச் செலுத்தும் தரீகாவாதிகளின்ஆதரவைப்பெற்று அவர்களின் துணையுடன் இலங்கைக்குள் நுழைவதற்குரிய ஒரு தந்திர வழியை அவர்களது தகிய்யா என்ற கோட்பாட்டினூடாக கன கச்சிதமாக செய்து வருகின்றனர் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது 

அத்தோடு அவர்களது இமாம் ஹுமைனி மற்றும் ஏனைய சமகால அறிஞர்களின் நூற்களில் குறிப்பாக கஷ்புல் அஸ்ரார் போன்ற நூற்களில் அஹ்லுஸ்ஸுன்னாவின் அகீதாவிற்கு நேர்முரணான சிந்தனைகள் பரவிக்கிடப்பதையும் நம்மால் அவதானிக்க முடிகிறது அது போலவே மூன்று நான்கு சஹாபாக்களைத் தவிற ஏனைய அனைத்து உத்தம சஹாபாக்களும் மதம் மாறிவிட்டார்கள் என்பதை தாமாக புஹாரியின் கிதாபுல் பிதனில் வருகின்ற முதல் ஹதீஸை வைத்து பிழையான விளக்கமும் கொடுத்து வருகின்றனர் 

வழிகெட்ட இந்த ஷீயா மதத்தவர்கள் நமது புனித குர்ஆனில் கூட பிழை உண்டு என நம்பியிருப்பவர்கள் இவர்களின் அடிப்படை அவர்களுடைய இமாம்கள் எழுதிய பிரதான நான்கு நூற்கள் மாத்திரமே 

1- உஸூலுல் காபி  
2- தஹ்ஸீபுல் அஹ்காம் 
3- மல்லா யஹ்ழுருஹுல் பகீஹ் 
4- அல் இஸ்திப்ஸார் 

அதிலும் குறிப்பாக உஸூலுல் காபி என்ற அவர்களது இமாம் குலைனி அவர்களால் எழுதப்பட்ட நூலே முதற்தரத்தில் வைத்து நோக்கப்படுகிறது இது தவிர ஏனைய நமது குர்ஆன் ஹதீஸ்களெல்லாம்  இவர்களது சுய விளக்கங்களுக்காகவும்  இஸ்லாமிய மார்க்கத்தை நையாண்டி செய்வதற்குமே பயன்படுத்துகிறார்கள்.

உண்மையில் இவர்கள் அஹ்லுல் பைத்தை நேசிப்பவர்களாக இருந்தால் சூரா அஹ்சாபின் 33 வது வசனம் நபியவர்களின் மனைவிமார்கள் அவர்களது குடும்பத்தினரே அங்கு (அஹ்லுல் பைத்) என்ற வார்த்தையே தெளிவாக இடம்பெற்றிருக்க அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளமலிருப்பது ஏன் ? அதனால்தான் நபியவர்களின் தோழர்களையும் மனைவிமார்களையும் இழிவு படுத்தி தமது கொள்கையை பரப்பிவருகின்றனர்

இவர்களது நோக்கமே தூய இஸ்லாத்தை குழி தோண்டி புதைப்பது தான் என்பது தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகிறது

8 comments:

  1. மாஷா அல்லாஹ் அழகான விளக்கக்கட்டுரை இவர்களின் உண்மைகளை தொடர்ந்துஎழுதி வந்தால் மிகவும் நல்லதோர் மாற்றத்தை நம் சமுகத்தின் மத்தியில் கொண்டு வர முடியும் ஆகவே கட்டுரையாளர் தொடர்ந்து இது சம்மந்தமான விளக்கங்களை எழுதுமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்,இலங்கையில் மிக வேகமாக இந்த வழிகெட்ட ஷியாக்கள்ஊடுருவி விட்டார்கள் கண்டும் காணாமல் அ இ ஜ உ இருக்கிறது பொறுப்புள்வர்கள் இன்னும் பொறுமையாக இருந்தால் பாரதூரமான விளைவுகளை சமுதாயம் சந்திக்க வேண்டி வரும்

    ReplyDelete
  2. Do you know why America attacked Iraq? the one main reason is to save Iran.

    ReplyDelete
  3. The true meaning of Shia:
    "Shia is a weapon, created and guiding by Zionist's to destroy Muslims and Islamic countries."

    ReplyDelete
  4. நீங்களும் எல்லோரையும் போல் ஷீஆக்கள் தொடர்பான போலியான குற்றச்சாட்டுகளைத்தான் கூறியுள்ளீர்கள். நீங்களும் எமது நாட்டிளுள்ள அதிகமான உலமாக்களும் அறிந்து கொள்ளாத ஷீஆயிசம் உண்டு. முடிந்தால் ஷீஆயிசத்தை அதனை பின்பற்றுபவர்களிடம் கேட்டு தெளிவுகாணுங்கள்.அவர்களின் எதிரிகள் கூறுவதை மாத்திரம் நம்பாமல்.

    ReplyDelete
  5. Thanks bro
    Not only this,I know many things about them. Do you Illuminaties (Rothschild) is controlling all South Asian banks from thehran capital of iran

    ReplyDelete
  6. Br.anfaz
    ஈரானில் நான் பல வருடங்கள் இருந்திருக்கிறேன் சுன்னிகளுக்கு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பள்ளிகளும் மதரசாக்களும் உள்ளன. அவர்கள் மிக சுதந்திரமாக வாழும் அதேவேளை ஷீஆக்களும் சுன்னிகளும் ஒரே பள்ளியில் தொழும் ஒற்றுமை காட்சிகளை பல இடங்களில் கண்டிருக்கிறேன்.தெஹ்ரானிலும் அவ்வாறுதான்.

    ReplyDelete
    Replies
    1. Don't lie man. In thehran which area did you stay? Can you tell?

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.