Header Ads



கழிவறை கட்ட முடியாத கணவனிடம், விவாகரத்து கோரும் புதுப்பெண்

வீட்டில் கழிவறை கட்ட கணவரிடம் பலமுறை முறையிட்டும் அதை புறகணித்து வருவதால் அவரிடம் இருந்து விவாகரத்து கோரி பெண் ஒருவர் கிராம பஞ்சாயத்திடம் முறையிட்டுள்ளார்.

கழிவறை கட்ட முடியாத கணவனிடம் விவாகரத்து கோரும் புதுப்பெண்
பாட்னா:

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா இவருக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது. கணவர் பெயர் பப்லு.  சமீபத்தில் அர்ச்சனா தன் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி கிராம பஞ்சாயத்திடம் முறையிட்டுள்ளார்.

கிராம பஞ்சாயத்திடம் அர்ச்சனா அளித்துள்ள புகாரில், வீட்டில் கழிவறை ஒன்றை கட்டும் படி பப்லூவிடம் பலமுறை முறையிட்டு வருகிறேன் ஆனால் அவர் தொடர்ந்து அதை புறகணித்து வருகிறார்.

தினமும் இரவில் வெட்ட வெளியை பயன்படுத்த சொல்லி பப்லூ வற்புறுத்துகிறார்.  இந்நிலையில், வெட்ட வெளி நிலத்தின் உரிமையாளர் தன்னை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாக குறை கூறியுள்ளார்.

மேலும், தனது பெற்றோரிடம் கழிவறை கட்டி தர சொல்லும் படி பப்லூ வற்புறுத்துவதாக அர்ச்சனா குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், அவரிடம் கூறி நான் அலுத்து விட்டேன், அவரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன், இக்காரணத்தினால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தரும்படி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.