Header Ads



"முஸ்­லிம்­கள் பார்த்துக் கொண்­டி­ருக்க முடி­யாது"

-விடிவெள்ளி-

வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்டால் வட கிழக்கில் பரந்து வாழும் முஸ்­லிம்­க­ளுக்­கென்று நிலத் தொடர்­பற்ற தனி மாகாணம் ஒன்று உரு­வாக்­கப்­பட்டு அம்­மா­கா­ணத்­திற்கு முஸ்லிம் முத­லமைச்சர் ஒருவர் நிய­மிக்­கப்­பட வேண்டும்.  

தமிழ் மக்கள் தங்­க­ளுக்­கென்று முத­ல­மைச்சர் ஒரு­வரை வட­கி­ழக்கில் தேர்ந்­தெ­டுத்துக் கொள்ள முடியும். இவ்­வா­றான நிர்­வாகக் கட்­ட­மைப்பே சிறந்த பலனைத் தரும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கரு­து­வ­தா­கவும் மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்­ரபின் அபி­லா­ஷையும் இதுவே என்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் எம்.ரி. ஹசன் அலி தெரி­வித்தார்.

இணைந்த வட கிழக்கில் முஸ்லிம் முத­ல­மைச்சர் ஒரு­வரை ஏற்றுக் கொள்ளத் தயார் என எதிர்க் கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ள கருத்­து­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் எம்.ரி. ஹசன் அலி இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

‘வட கிழக்கில் முஸ்­லிம்­களின் பெரும்­பான்மை பிர­தி­நி­தித்­து­வத்தைக் கொண்­டுள்ள பிர­தேச சபைகள் ஒன்­றி­ணைக்­கப்­பட்டு நிலத் தொடர்­பற்ற தனி அல­கொன்று முஸ்­லிம்­க­ளுக்­கான மாகா­ண­மாக நிறு­வப்­பட வேண்டும்.

முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­களை ஒன்­றி­ணைத்து நிலத் தொடர்­பற்ற மாகாணம் ஒன்று உரு­வாக்­கப்­ப­டு­வது வட­கி­ழக்கில் முஸ்லிம் தமிழ் மக்­க­ளி­டையே நிலவும் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வாக அமையும்.

இந்­தி­யாவில் பாண்­டிச்­சேரி மாநிலம் நிலத் தொடர்­பற்ற மாநி­ல­மாக நிர்­வாக அல­காக அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இவ்­வா­றான ஒரு நிர்­வாக அலகே மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்­ரபின் அபி­லா­சை­யாக இருந்­தது.

வட கிழக்கில் அமையும் முஸ்­லிம்­க­ளுக்­கான மாகாணம் கல்­முனை, பொத்­துவில், சம்­மாந்­துறை ஆகிய மூன்று தொகு­தி­க­ளையும் மைய­மா­ன­தாக கொண்டு அமைய வேண்டும்.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வில் அர­சாங்கம் தீர்வுத் திட்­டத்தைவடி­வ­மைக்கும் வரை முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் பார்த்துக் கொண்­டி­ருக்க முடி­யாது. வடக்கு கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்கள் இது தொடர்பில் கலந்து பேசி ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வரு­வது பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்குப் பல­மாக அமையும். 

புதிய அம்­பாறை மாவட்டம் உரு­வாக்­கப்­பட்­ட­போது அங்­கி­ருந்த முஸ்­லிம்கள் பல பாதிப்­பு­களைச் சந்­தித்­தார்கள். தமது பாரிய நிலப்­ப­ரப்­பு­களை இழந்­தனர். பெரும்­பான்­மை­யினர் இவ்­வாறு தமிழ், முஸ்லிம் மக்­களின் பிர­தே­சங்­களில் குடி­யேற்­றப்­பட்டு இன­ப­ரம்பல் விகி­தா­சா­ரத்தில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்­களின் பெரும்­பான்மை பாது­காக்­கப்­பட வேண்டும் என்பதில் முஸ்லிம் காங்கிரஸும் உறுதியாக இருக்கிறது.

வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் வழங்கப்பட்டு இரு முதலமைச்சர்கள் வடக்கு கிழக்கில் இருப்பதன் மூலம் எமது குடிப்பரம்பலை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Can you please shut up. East and North will not merge and we will not allow to merge. East is East and North is North. NO MERGER PLEASE

    ReplyDelete
  3. அது பாண்டிச்சேரி அல்ல புதுச்சேரி என்று நினைக்கிறேன்

    ReplyDelete

Powered by Blogger.