Header Ads



மாதமொன்றுக்கு ஒருகோடி, ரூபா இலஞ்சம் - அடியோடு மறுத்தார் கபீர்


அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு ஒரு கோடி ரூபா லஞ்சம் வழங்க வர்த்தகர் ஒருவர் மேற்கொண்ட முயற்சிக்கு அமைச்சர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய அமைச்சர் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி என்பதுடன், தேசிய அரசாங்கம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இருவரில் ஒருவராவார். அத்துடன் பசுமைக் கட்சியொன்றின் பொதுச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கின்றார்.

குறித்த அமைச்சருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த இலங்கையின் தனியார் தொலைக்காட்சி உரிமையாளர் ஒருவர், தனது வர்த்தகம் தொடர்பான சில வேளைகளை நிறைவேற்றித் தருமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் அமைச்சர் அவற்றை நிறைவேற்றிக் கொடுக்காத நிலையில், அவரை நேரடியாக சந்தித்த குறித்த வர்த்தகர் மாதமொன்றுக்கு ஒரு கோடி ரூபா அன்பளிப்பாக தருவதாகவும், தனது வர்த்தக நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக செயற்படுமாறும் அமைச்சருக்கு ஆசை காட்டியுள்ளார்.

எனினும் அமைச்சர் அதற்கும் மசியவில்லை என்று கூறப்படுகின்றது. இதற்கிடையே குறித்த வர்த்தகரும் தற்போது வேறு அமைச்சர்களை நோக்கி வலை வீசிக் கொண்டிருப்பதாக கேள்வி.

இந்த வர்த்தகர் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவரை அச்சுறுத்திய விடயத்துடனும் தொடர்புடையவர் என்று தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.