Header Ads



கொழும்பு - புறக்கோட்டையில் தீ விபத்து

கொழும்பு - புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் உள்ள வர்த்தக நிலயம் ஒன்றில் திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள வர்த்த நிலையத்தில் இன்று ஏற்பட்ட தீயினால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்படுகின்றது.

இதனால் கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுகின்றன.

குறித்த இடத்தில் 5இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தீ விபத்தினால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், பொருட்களுக்கான சேதங்கள் பற்றி இதுவரை எந்தத் தகவல்களும் அறியவிக்கப்படவில்லை.

No comments

Powered by Blogger.