Header Ads



முஸாமிலுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, தேசிய விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாமில் எதிர்வரும் 7ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கடந்த 20ம் திகதி கைதுசெய்யப்பட்ட இவர், கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

இதனையடுத்து, இன்று மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முஸாமில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப் பகுதியில் அவருக்கு ஜனாதிபதி செயலகத்தால் வாகனங்கள் வழங்கப்பட்டது. 

எனினும், 2010ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் இழந்த பின்னரும் குறித்த வாகனங்களை அவர் மீள ஒப்படைக்கவில்லை என, பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், அவர் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்காக 62 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்று, அதனை தனது மனைவியின் வங்கிக் கணக்கில் வைப்பில் இட்டுள்ளதாகவும், பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். 

No comments

Powered by Blogger.