கோத்தபாய கைது, தொடர்பில் முரண்பாடு..?
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்வது தொடர்பில் ஆளும் கட்சியின் இருதரப்பினருக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ராஜபக்ச கட்டளை நிதி மோசடி, ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம், தாஜுடின், லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கொலை உள்ளிட்ட விடயங்களைசுட்டிக்காட்டி கோத்தபாய ராஜபக்சவை உடனடியாக கைது செய்யவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சிவலியுறுத்தி வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஸ்ட அமைச்சர் ஒருவர்சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
எனினும் கோத்தபாயவை கைது செய்வதற்கு ஆளுங்கட்சியின் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுவருவதாகவும் குறித்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
Post a Comment