Header Ads



"பிக்குகள் சமூகம் துண்டு, துண்டுகளாக பிளவடைந்துள்ளது"

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை சிறைக்கு செல்லும் போது அவர்களின் கைகளில் பிரித் நூல் கட்டும் பௌத்த பிக்குகள் இன்று இலங்கையில் இருக்கின்றார்கள் என தேசிய பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் வகாமுல்லே உதித்த தேரர் தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

அரச சொத்துக்களை கொள்ளையிட்டு கைவிலங்கு இடப்பட்டு சிறைக்குச் செல்லும் அரசியல்வாதிகளின் கைகளில் பிரித் நூல் கட்டும் பௌத்த பிக்குகள் இருக்கின்றார்கள்.

பிக்குகள் சமூகம் துண்டு துண்டுகளாக பிளவடைந்துள்ளது.

எனவே நாட்டின் புதிய சமூகமொன்றை கட்டியெழுப்ப முன்னிலை வாகிக்க வேண்டியேற்பட்டுள்ளது. இன்று பண்புகள் சீரழிந்துள்ளன, சில பௌத்த பிக்குகள் தமது பிக்குதனத்தையும் பணத்திற்கு விற்பனை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

25000 ரூபா வழங்கினால் பௌத்த உபதேசம் சொற்பொழிவு வழங்கும் பௌத்த பிக்குகள் இருக்கின்றார்கள். இல்லையா?

அரச சொத்துக்களை கொள்ளையிட்டு சிறைக்குச் செல்லும் அரசியல்வாதியின் கைகளில் பிரித் நூலைக் கட்டி அவர்களை வீரர்களாக்குவது பௌத்த பிக்குவின் கடமையல்ல.

அரசியல்வாதிகள் காலத்திற்கு காலம் பௌத்த பிக்குகளை ஏமாற்றி வருகின்றனர்.

எமது தலைவர்கள் எங்களை பிழிந்து எடுத்து, வரி அறவீடு செய்து அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்களையும் மாளிகைகளையும் வழங்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்கள் சொத்துக்கள் கொள்ளையிடப்படுகின்றன.பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு சொந்த வீடுகள் வாழ்நாள் முழுவதிலும் கிடைக்காத நிலைமை காணப்படுகின்றது.

சிறுநீரக நோய்களினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், நாட்டின் சமூக முறைமையை முற்று முழுதாக மாற்றி அமைக்க வேண்டும் என வெகாமுல்லே உதித தேரர் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.