நாம் தயாராக இருக்கிறோம் - BBS
முஸ்லிம் தரப்பு பொது பலசேனாவின் செயலாளரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நாம் தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தைகள் மூலம் முஸ்லிம்களுக்கும் எமக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகள் தொடர்பில் தெளிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே தெரிவித்தார்.
முஸ்லிம் தரப்புடனான நேரடிப் பேச்சுவார்த்தை தொடர்பிலான பொதுபலசேனாவின் நிலைப்பாட்டினை வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;ஆனால் முஸ்லிம் கவுன்ஸிலையும் அசாத் சாலியையும் நாம் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பகிரங்க விவாதத்துக்கு அழைக்கிறோம்.
சில ஆவணங்களுடன் அவர்களை பகிரங்க விவாதத்தில் சந்திக்க விரும்புகிறோம்.அசாத்சாலி தற்கொலைப் படையாகமாறி ஞானசார தேரரை அழித்துவிட்டு தானும் இறக்க தயார் எனும் கருத்துப்பட பேசியிருக்கிறார். புத்தர் பெருமானுக்கு ஏசினால் இவ்வாறு செய்யும்படி புத்த பெருமான் போதிக்கவில்லை. புத்தர் கருணையையே போதித்துள்ளார் என்பதை அவருக்கு கூறி வைக்க விரும்புகிறோம்.
முஸ்லிம் தரப்புடனான நேரடிப் பேச்சுவார்த்தை தொடர்பிலான பொதுபலசேனாவின் நிலைப்பாட்டினை வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;ஆனால் முஸ்லிம் கவுன்ஸிலையும் அசாத் சாலியையும் நாம் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பகிரங்க விவாதத்துக்கு அழைக்கிறோம்.
சில ஆவணங்களுடன் அவர்களை பகிரங்க விவாதத்தில் சந்திக்க விரும்புகிறோம்.அசாத்சாலி தற்கொலைப் படையாகமாறி ஞானசார தேரரை அழித்துவிட்டு தானும் இறக்க தயார் எனும் கருத்துப்பட பேசியிருக்கிறார். புத்தர் பெருமானுக்கு ஏசினால் இவ்வாறு செய்யும்படி புத்த பெருமான் போதிக்கவில்லை. புத்தர் கருணையையே போதித்துள்ளார் என்பதை அவருக்கு கூறி வைக்க விரும்புகிறோம்.
அசாத் சாலியோ முஸ்லிம் கவுன்சிலோ நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு இவர்களுடன் போவதென்பது. சிங்கள மக்கள் மத்தியில் வலுவிழந்த BBS எனும் மிருகங்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்கு ஒப்பானது. ஞானசாராவுக்கு இப்ப்பொழுது தேவை தான் இழந்த மதிப்பை சிங்களவர்களிடம் மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான விளம்பரம் மட்டுமே
ReplyDelete