Header Ads



பாடசாலைக்கு பலவந்தமாக பிள்ளைகளை ,சேர்க்க முற்பட்ட 9 தாய்மார் கைது

களுத்துறை - மீகஹத்தென்ன ஆரம்பப் பாடசாலையில் தமது பிள்ளைகளை பலவந்தமாக சேர்க்க முற்பட்டதாக கூறப்படும் ஒன்பது தாய்மார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் குறித்த ஒன்பது பேர் உட்பட 10 பேரின் பிள்ளைகளை பாடசாலையில் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, பிரதி அமைச்சர் பாலித்த தேவரப்பெருமவால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

இறுதியில், இதன்நிமித்தம் தற்கொலைக்கு முயன்ற தேவரப்பெரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் இன்று தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வந்து பலவந்தமாக அவர்களை பாடசாலையில் சேர்க்க முற்பட்ட 9 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பாலித்த தேவரப்பெரும கைதுசெய்யப்படாதது ஏன் என, பொலிஸாரிடம் வினவியபோது, அவர் இன்னும் வைத்தியசாலையிலேயே இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் இந்த விடயத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மீகஹத்தென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கைதான ஒன்பது தாய்மார்களையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.